பிரபல தென்னிந்திய நடிகர் ஆன சரத் பாபு ஹைதராபாத்தில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிரதிஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் நிலையில் நிறைவேற ஆசியுடன் இவர் இருந்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
Sarath Babu
250 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சரத்பாபுவிற்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன சினிமா வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட இவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையவில்லை.
இரண்டு முறை திருமணம் செய்தும் அது விவாகரத்தில் முடிந்தது. இரண்டு முறை திருமணம் ஆகியும் இவருக்கு வாரிசு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வசந்த முல்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் சரத்பாபு.
Sarath Babu
பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்த சரத்பாபுவிற்கு அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது. திரைப்படங்களில் நடித்து நடிப்பதை நிறுத்தி விட்டு ஹார்செலி ஹில்ல் பகுதியில் வீடு கட்டி அங்கே தன்னுடைய கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார் சரத்பாபு.
Sarath Babu
இதற்காக இடம் வாங்கி வீடும் கட்டி வந்திருக்கிறார். கிட்டத்தட்ட அந்த வீடு கட்டி முடியும் தருவாயில் நடிகர் சரத்பாபு உயிரிழந்திருக்கிறார். அதனால் குடியேற வேண்டும் என்கிற அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் போயிருக்கிறது. தற்பொழுது அந்த வீடு நிற்கதியாக நிற்கிறது.